அடுத்த வருஷம் என்ன பிளான்? தோனியின் பதிலால் உற்சாகமடைந்த ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பதவியில் அடுத்த ஆண்டும் தொடருவேன் என்று மகேந்திரசிங் தோனி நேற்று ஒருபேட்டியில் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 40 வயதாகும் தோனி சிஎஸ்கே அணிக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுக் கொடுத்துவிட்டு ஐபிஎல் தொடரை விட்டு விலகிவிடுவார் என்று சில ரசிகர்கள் அச்சதை வெளிப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து நேற்றைய ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றைய இறுதிப் போட்டியின்போது தோனியிடம் வர்ணனையாளர் எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அதில் கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு ஏற்ப முழு தகுதியுடன் இருக்கிறது எனத் தோனி தெரிவித்தார். மேலும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அமீரகம் என ஐபிஎல் தொடர் எங்கு நடைபெற்றாலும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பதற்கு நன்றி எனவும் கூறினார். அதோடு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது போன்ற ஒரு வரவேற்பை ரசிகர்கள் துபாய் அரங்கில் கொடுத்தாக நெகிழ்ச்சியடைந்தார்.

இதையடுத்து சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான அணியாக திகழ்கிறதே… என்று வர்ணனையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தோனி ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிகமுறை தோல்வியடைந்த அணியும் சிஎஸ்கே அணிதான் என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

மேலும் சிஎஸ்கே டீமிற்கு மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறீர்கள் என்று வர்ணனையாளர் கூறியதற்கு பதிலளித்த தோனி “நான் இன்னும் விட்டுச் செல்லவில்லையே!...“ என உற்சாகமிக்க சிரிப்புடன் கூறிவிட்டு தனது உரையாடலை முடித்துக்கொண்டார். இந்தக் கருத்து தற்போது சிஎஸ்கே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் மூலம் சிஎஸ்கே அணியை அவர் வலிமைப் படுத்துவார் என்றும் தனக்குப் பின்பு ஒரு வலிமையான அணியை உருவாக்கிவிட்டுதான் அவர் சிஎஸ்கே கேப்டன்சியில் இருந்து விலகுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

More News

இந்தியாவில் அறிமுகமாகும் 6ஜி சேவை? சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியா முழுக்க தற்போது 4ஜி சேவை பரவலாகி இருக்கிறது. ஆனால் இதற்கிடையில் சீனா, தென்கொரியா,

இந்தியக் கிரிக்கெட் அணியின்அடுத்த பயிற்சியாளர் யார்? வெளியான பரபரப்பு தகவல்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இருப்பதற்கு

காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்றோமா? அபிஷேக்கை பங்கமாய் கலாய்த்த ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோவில் லைக், டிஸ்லைக் குறித்து விளக்கமளித்த ராஜு ஜெயமோகன், அபிஷேக்கை சைக்கிள் கேப்பில் பங்கமாய் கலாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நடிகர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கும் அடுத்த படத்தில் 'பாகுபலி' படத்தில் நடித்த நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள்

'நானே வருவேன்' நாயகியாகும் 'பிகில்' பட நடிகை!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது