தமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி?

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

தமிழகத்தைச் சேர்ந்த தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்றும், தனது வீட்டின் சுவரில் தோனியின் புகைப்படங்களை வரைந்தார் என்றும், இதற்காக அவர் லட்சக்கணக்கில் செலவு செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

கடலூர் மாவட்டம் அரங்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற இந்த ரசிகரின் வீடு குறித்த தகவல் அறிந்ததும் சமீபத்தில் பேட்டி தோனி, அந்த ரசிகருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்த அளவுக்கு அன்பு காட்டும் ரசிகர்களை நினைக்கும்போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தோனி தனது வீட்டை நேரில் வந்து பார்க்க வேண்டும் என கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தோனி சார் வரை என்னுடைய வீடு குறித்த தகவல் ரீச் ஆகி இருப்பதை நினைக்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. தோனி சார் என்னை பற்றி குறிப்பிட்டது என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு பெருமையாக நான் கருதுகிறேன்.

என்னுடைய ஒரு ஆசை என்னவென்றால் தோனி சார் அவர்கள் இந்த அரங்கூர் கிராமத்திற்கு வந்து என்னுடைய வீட்டை நேரில் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர தமிழக ரசிகருக்காக தோனி, அரங்கூர் கிராமத்திற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

ஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்!

விஷால் நடித்த 'சக்ரா', துப்பறிவாளன் 2 ' மற்றும் ஆர்யாவுடன் அவர் நடிக்கும் படம் என மூன்று படங்களின் அப்டேட்டுக்கள் ஒரே நாளில் வெளிவந்திருப்பது விஷால் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்!!!

நவராத்திரி வழிபாடுகளில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது கொலு வழிபாடு. இந்தக் கொலு வழிபாடு வேறுபாடு உள்ள இந்த சமூகத்தில்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மூலிகை தாவரம்…

எக்கினாப்ஸ் எனும் வகையைச் சார்ந்த 2 புதிய மூலிகை வகை செடியை விஞ்ஞானிகள் வடக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டுபிடித்து உள்ளனர்.

அர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது?

கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பிரச்சினை நீடித்து வந்த நிலையில் நேற்று அந்த பிரச்சனை பெரிதாக வெடித்து.