close
Choose your channels

சிஎஸ்கேவின் தோல்விக்காக தோனியின் 5 வயது குழந்தையை தரக்குறைவாக தாக்கும் மீம்ஸ்... பதறும் ரசிகர்கள்!!!

Saturday, October 10, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிஎஸ்கேவின் தோல்விக்காக தோனியின் 5 வயது குழந்தையை தரக்குறைவாக தாக்கும் மீம்ஸ்... பதறும் ரசிகர்கள்!!!

 

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அணியின் கேப்டன் தோனியின் 5 வயது குழந்தைக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் அணி தோல்வியைச் சந்திக்கும்போது வீரர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து விமர்சிப்பது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. இதற்குமுன்பு விராட் கோலியின் மோசமான ஆட்டத்தை விமர்சித்த ரசிகர்கள் சிலர் அவரது மனைவியையும் விமர்சனப் படுத்தி இருந்தனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தாலும் தாக்குதல்கள் தொடரவே செய்கின்றன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி படு தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கேதர் ஜாதவ்வின் மோசமான பேட்டிங்கே காரணம் எனச் சில ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அப்படி சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய விமர்சனம் இறுதியில் 5 வயது குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடும் நிலைக்கு வளர்ந்தும் இருக்கிறது.

சென்னை அணியின் தோல்வியைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் 5 வயது மகள் ஷிவா மற்றும் கேதர் ஜாதவ்வின் ஒரு மகள் ஆகிய இருவருக்கும் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் அளவிற்கு மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பதிவிற்கு பல ரசிகர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் பல்வேறு திருப்பத்தைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. ரசிகர்கள் கணிக்க முடியாத அளவிற்கு 2020 ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகள் இருக்கும் பட்சத்தில் சென்னை சிஎஸ்கே அதிக போட்டிகளில் வெற்றிப் பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. மேலும் இந்த 2020 ஐபிஎல் போட்டிகள் சிஎஸ்கே வீரர்களுக்கும் கடும் ஏமாற்றத்தையே கொடுத்து இருக்கும். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளைக் குறித்து சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் இதற்காக தோனியின் குடும்பத்தை விமர்சிப்பதும் அவரது மகள் ஷிவாவுக்கு சோசியல் மீடியாவில் பாலியல் மிரட்டல் விடுப்பதும் போன்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல்களை சிலர் செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்களிடையே காரசாரமான வாக்குவாதங்களும் சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கிறது. மேலும் இந்த மிரட்டலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.