தோனி 100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு… நிராகரிக்க கோரிய மனுவில் நீதிபதி அதிரடி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சென்னை சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்துவரும் தோனி கடந்த 2014 இல் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் கூறியதை அடுத்து பரபரப்பு கிளம்பியது.

இதனால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டிய தோனி, இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதன் செய்தி ஆசிரியர், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோரிடம் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதுகுறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் தோனி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது. ஒருவேளை அப்படி தள்ளுபடி செய்தால் முதன்மை வழக்கில் தாமதம் ஏற்படும் என்றும் இதனால் சாட்சி விசாரணையை எதிர்கொள்ளுமாறு சம்பத்குமாருக்கு பரிந்துரை செய்து வழக்கை விசாரித்த நீதிபதி சேஷாசாயி தள்ளுபடி செய்துள்ளார்.

முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து கடந்த 2016 – 17 ஆம் ஆண்டுகளில் சென்னை சிஎஸ்கே, ஐபிஎல் அணிகளில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே வீரர்கள் வேறு அணிகளில் இணைந்து விளையாடினர். அந்த வகையில் மகேந்திர சிங் தோனி பூனே அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திருமணத்திற்கு பின் காத்ரீனா கைஃபின் உணர்ச்சிகரமான முதல் பதிவு!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேற்று நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே

அபினய் - பாவனி சர்ச்சையில் ஒரே நாளில் நடந்த மாற்றம்: பிக்பாஸ் தலையிட்டாரா?

அபினய்க்கும் தனக்குள் இருக்கும் உறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராஜு மற்றும் சிபியுடன் நேற்று ஆவேசமாக சண்டை போட்ட பாவனி, இன்று திடீரென அவர்களை கட்டிப்பிடித்து சமாதானம்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கிங்… பிபின் ராவத்தின் வியக்க வைக்கும் சாதனைகள்!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த இந்திய ராணுவத்தில் புயலாக பரிணமித்தவர்தான் பிபின் ராவத்.

கிச்சா சுதீப்பின் பிரமாண்ட 3D திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகரான கிச்சா சுதீப் நடித்த பிரமாண்ட திரைப்படமான “விக்ராந்த் ரோணா” என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

'பொன்னியின் செல்வன்' வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்