close
Choose your channels

இந்த அழகான மனிதரை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்: துருவ் விக்ரமின் செல்பி

Saturday, April 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ‘வர்மா’ என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும் அவர் தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் துருவ் விக்ரம் சற்றுமுன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று வெளியான தனுஷின் ’கர்ணன்’ திரைப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதற்கு இந்த படம் துருவ் விக்ரமுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.