துருவ் விக்ரம் பாடிய 'ஆதித்ய வர்மா' பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Friday,August 16 2019]

துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்ய வர்மா' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் இந்த படத்திற்காக பாடிய 'எதற்கடி வலி தந்தாய்' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. முதல் பாடலையே ஒரு சிறந்த பாடகர் போன்று பாடியிருக்கும் துருவ் விக்ரம் பாடிய பாடல் இதோ:

எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே
நீதானடி நினைவின் தேனியே
என் வாழ்க்கையில் விழி நீரின் தீனியே
எனை கொஞ்சி சாய்க்கவே
கொஞ்சம் வந்து போய்விடு
உன்னை பார்க்கணும்.......
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே

உன்னை தவிர எதுவுமே இஷ்டமில்லையே
விட்டு போன வேதனையே
வட்டம் போட்டு என்னை வெறுக்கும்
காதல் தீயிலே உந்தன்
கண்கள் தேடினேன்
உன்னை பார்க்கணும்.....
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே

எதற்கடி வலி தந்தா
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே

ராதன் இசையில் விவேக் பாடல் வரியில் துருவ் விக்ரம் பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

More News

ஆர்யாவின் வெற்றிக்காக வாழ்த்திய சூர்யா!

நடிகர் ஆர்யா ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு சைக்கிள் ரைடர் என்பதும், தேசிய அளவில் பல்வேறு சைக்கிள் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார் என்பதும் தெரிந்ததே

அண்ணா கூறியதைத்தான் ரஜினியும் கூறினார்: அதிமுக அமைச்சரும் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் மோடி - அமித்ஷா குறித்தும்

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா-ஜூலி இணைந்து நடிக்கும் பயங்கர கேம் திரைப்படம்!

பிக்பாஸ் முதல் சிசனில் கலந்து கொண்ட ஜூலியும், பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து ஒரு பயங்கரமான கேம் படத்தில் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் சமுத்திரக்கனி! என்ன கேரக்டர்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது

'பிகில்' இசை வெளியீடு குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து