close
Choose your channels

திருமணத்திற்காக மதம் மாறினாரா சஞ்சனா கல்ராணி? வைரலாகும் ஆவணங்கள்!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சஞ்சனா கல்ராணியிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவருக்கும் டாக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சஞ்சனா கல்ராணிக்கு கார் மற்றும் வீடு ஆகியவற்றை அந்த டாக்டர்தான் வாங்கிக் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் அந்த டாக்டரை திருமணம் செய்வதற்காக சஞ்சனா கல்ராணி மதம் மாறியதாகவும் அவர் மதம் மாறியதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இதுகுறித்து சஞ்சனா கல்ராணி தாயார் கூறிய போது ’டாக்டருடன் சஞ்சனாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும் ஏப்ரல் மாதமே திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மதம் மாறியது குறித்த கேள்விக்கு சஞ்சனாவின் தாயார் எந்தவித பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சஞ்சனா கல்யாணி ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருக்கும் நிலையில் அவர் மதம் மாறியதாக தற்போது ஊடகங்களில் ஆவணங்களுடன் கூடிய தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.