close
Choose your channels

இந்த தமிழ் நடிகை ஒரு கோல்ப் வீராங்கனையா? ஆச்சர்யமான ரசிகர்கள்!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் கடந்த 2014 இல் வெளியான “என்னமோ ஏதோ” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதற்கு பிறகு நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று“, நடிகர் சூர்யாவுடன் “என்ஜிகே“ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு கோல்ப் வீராங்கனை என்பதும் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொண்டவர் என்பதும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் வொர்க் அவுட் மற்றும் பிட்னஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருவதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் ஒரு கோல்ப் வீராங்கனை எனும் தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் “காண்டம்“ பரிசோதகராக “Chhatriwali“ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து “Attack“, “Runway 34“, “Doctor“, “Thank God“ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “அயலான்“ திரைப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2“ திரைப்படத்தில் இணைந்து நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.