close
Choose your channels

துரோகிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம்: தினகரன்

Friday, December 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரனுக்கு நேற்று தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியது. இந்த சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கிய தினகரன், 'துரோகிகளுக்கு பிரஷர் ஏற்றவே ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தை தேர்வு செய்தோம்' என்று கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: ’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆயிரத்தெட்டு தொல்லைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் படிக்கற்களாக்கி எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்தேன். தேர்தல் பணிகளை அடுத்த பத்தாவது நிமிடத்தில் தொடங்கிவிடுவேன்’ என்று கூறினார். அவர் கூறியபடியே கையில் குக்கரை ஏந்தியபடி நேற்றிரவே தினகரன் ஆர்.கே.நகரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து கூறியபோது, 'எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை, இருக்கின்ற பிரஷரில் வெடிக்கப்போவது யாரென்று இன்னும் இரண்டு  வாரத்தில் தெரியும்  என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.