நெடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்!

திறமை இருந்தும் பல ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்துவந்த தினேஷ் கார்த்திக் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 3 வருடங்களுக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடித்து இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். அதேபோல ஐபிஎல் போட்டிகளுக்காக கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் இருந்து வந்தார். ஆனால் 3 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டன. அதே நேரத்தில் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் என விமர்சிக்கப்பட்டதை அடுத்து கொல்கத்தா அணியில் இருந்தும் அவர் விலகினார்.

இதனால் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டது என விமர்சிக்கப்பட்ட நிலையில் ஸ்கைஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனத்திற்காக இவர் வர்ணனையாளராகப் பணியாற்றத் துவங்கினார். இந்தத் தருணத்தில் ஐபில் போட்டிகளுக்காக இவர் ஆர்சிபி அணி சார்பாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்ட தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளில் திறமையாக விளையாடி தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக இதுவரை விளையாடிய 14 ஐபிஎல் போட்டிகளில் 150 பந்துகளுக்கு 287 ரன்களைக் குவித்து ரசிகர்களை அசரவைத்தார். இதைத் தொடர்ந்து 3 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்காலிக கேப்டனாக கேஎல் ராகுல், துணை கேப்டனாக ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், தீபக் ஹுடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல 3 வருடங்களுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் இந்தத் தொடர் போட்டியில் சாஹல், குல்தீப், ரவி புஸ்னாய், அக்சர் படேல் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களும், புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல், உம்ரான் மாலிக் ஆவேஷ் கான், ஆர்ஷ்தீப் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடம்பெற்றுள்ளனர்.

More News

'டிமாண்டி காலனி' இரண்டாம் பாகம்: ஆனால் மிகப்பெரிய மாற்றம்!

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' வெளியாகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபலம்: கசிந்தது 'விக்ரம்' பட ரகசியம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும் அந்த தகவல் சமீபத்தில் கசிந்தது என்பதும் அதனை அடுத்து படக்குழுவினர்களே

கமல்ஹாசனின் 'விக்ரம்' ரன்னிங் இடம் இவ்வளவு அதிகமா? செம விருந்து காத்திருக்கு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

விக்ரம், சமந்தாவுடன் மோத முடிவு செய்த விஷால்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர்களின் படங்கள் ரிலீசாகும் தினத்தில் தனது படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு காமெடி நடிகருடன் டான்ஸ் ஆடிய பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அவருடன் நெல்சன் குடும்பத்தினர், கவின் உள்பட பலரும் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே .