பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி… சர்ச்சை கமெண்டால் சிக்கிய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை விடவும் சமீபகாலமாக கிரிக்கெட் வர்ணனையில் கலக்கி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இவர்தான் வர்ணனையாளராக செயல்பட்டார். மேலும் இந்திய ரசிர்களைத் தவிர இவர்கூறும் ஒன்லைன் கமெண்ட்டு பல வெளிநாட்டு வீரர்களுக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் வர்ணனையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் தினேஷ் கார்த்திக் தற்போது எக்குத்தப்பான ஒரு கமெண்டை கூறி பெண்களின் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின்பு இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. அப்படி நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட தினேஷ் கார்த்தி ஒரு கருத்தை விளையாட்டாக கூறி இருந்தார்.

அதாவது கிரிக்கெட் பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி. எவ்வளவு நன்றாக இருந்தாலும் அடுத்த வீரரின் பேட்டைத்தான் அனைத்து வீரர்களும் விரும்புகிறோம் எனப் போகிற போக்கில் சொல்லிவிட்டார். தினேஷ் கார்த்திக்கின் இந்த கமெண்டிற்கு சோஷியல் மீடியாவில் கடும் சர்ச்சை கிளம்பி வருகிறது. அதிலும் பெண் ரசிகர்கள் இந்தக் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த கமெண்டிற்கு நெட்டிசன்கள் சிலர் “பாவம் தினேஷ் கார்த்திக்கின் பக்கத்து வீட்டுக் காரர்” என அவரை கேலி செய்வதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பாபநாசம் 2' படத்தில் நடிக்கின்றேனா? மீனா அளித்த பதில்!

மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிவு: தமிழ் நடிகை அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாக தமிழ் நடிகை ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வனிதாவின் அதிரடி முடிவு குறித்து ஒரே வார்த்தையில் கமெண்ட் அளித்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை வனிதா விஜயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விஜய் டிவியிலிருந்து தான் வெளியேறுவதாகவும், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும்

'தலைவி 2' எடுத்தால் ரஜினி சொன்ன விஷயங்கள் இணைக்கப்படும்: மதன் கார்க்கி 

'தலைவி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ரஜினி கூறிய சுவாரசியமான விஷயங்கள் அதில் சேர்க்கப்படும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த 'தலைவி' படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கி

ஆன்லைன் வகுப்பில் மாணவர் செய்த சேட்டை… லைவ்வாக செக்ஸில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!

கொரோனா காரணமாகக் கல்வி முறையே மாற்றம் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் அனைத்து பள்ளி, கல்லூரி வகுப்புகளும் ஆன்லைனில்தான் நடைபெற்று வருகின்றன