close
Choose your channels

அப்பா ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக்… இரட்டைக் குழந்தைகளுடன் வைரலாகும் புகைப்படம்!

Friday, October 29, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்துவருபவர் தினேஷ் கார்த்திக். இவர் சமீபத்தில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ள செய்தியை தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருந்துவரும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் கலக்கிவந்தார். சமீபகாலகமாக சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவரும் அவர், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். அதோடு வர்ணனையாளராக செயல்பட்டு பழைய ஃபார்மிற்கு முன்னேறி வருகிறார்.

தீபிகா பல்லிக்கல் என்பவரைக் காதலித்து தினேஷ் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. மேலும் தங்களுடைய குழந்தைகளுக்கு கபிர் பல்லிக்கல் கார்த்திக், சியான் பல்லிக்கல் கார்த்திக் என்று அழகான பெயர்களையும் வைத்துள்ளனர். இதையடுத்து தினேஷ் கார்த்திக் பதிவிட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.