10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?

  • IndiaGlitz, [Monday,January 03 2022]

தமிழகத்தில் இன்றுமுதல் 15-18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாக இந்தக் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் மாணவர்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் இல்லம் தேடி கல்வி மையத்தைத் துவங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்,15-18 வயது உள்ளோருக்கு தடுப்பூசி என்பது மிகவும் முக்கியம். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால் இந்தக் கல்வியாண்டில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும்.

மேலும் மாநிலம் முழுவதும் 80,000 இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன எனத் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தத் திட்டத்தை விரிவாக்க இன்னும் கூடுதலாக 1,70,000 மையங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் 2,34,175 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. ஒரேநாளில் இவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

More News

கோலி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீர் விலகல்… என்ன காரணம்?

தசைப்பிடிப்பு காரணமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான

டெஸ்லாவின் முதல் ஊழியரே ஒரு தமிழரா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

சமீபகாலமாக மின்சார கார் உற்பத்தி மற்றும் விண்வெளி துறை

தோனி மீது பரபரப்பு புகார் கூறிய முக்கிய வீரர்… திடீர் பல்டியடித்த சம்பவம்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நான் இந்திய அணியில் இடம்பெறாததற்கு முன்னாள் கேப்டன்

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் உருகி உருகி எழுதிய பாடல்: வீடியோ வைரல்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்காக அவரது காதலர் விக்னேஷ் சிவன் உருகி உருகி எழுதிய பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் ஓடிடியில் இந்த மூன்று போட்டியாளர்களா? இன்னொரு ஆச்சரிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் 2 வாரத்தில் பிக்பாஸ் 5 வது சீசன் நிறைவு பெறப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது