அஜீத்-விஜய் இயக்குனர் படத்தில் வில்லனாகும் பார்த்திபன்

  • IndiaGlitz, [Tuesday,August 11 2015]

விஜய், அஜீத், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி கொடுத்த இயக்குனர் பேரரசு கடந்த சில வருடங்களாக படங்கள் எதையும் இயக்காமல் இருந்தாலும், தற்போது அவர் இயக்கியுள்ள 'திஹார்' திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. தன்னுடைய அனைத்து படங்களுக்கும் ஊரின் பெயரையே டைட்டிலாக வைக்கும் வழக்கம் உள்ள பேரரசு, இந்த படத்திற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஜெயில் அமைந்துள்ள நகரமான 'திஹார்' பெயரை வைத்துள்ளார்.


இந்த படம் கடந்த 1990ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான சாம்ராஜ்யம் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. அந்த படத்தில் நிழலுலக தாதாவாக மம்முட்டி நடித்த அலெக்ஸாண்டர் என்ற கேரக்டரின் மகன் தான் 'திஹார்' படத்தின் ஹீரோ கேரக்டர் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் அதிர வைக்கும் வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார். பார்த்திபனின் கேரக்டர் மற்றும் பாடி லாங்குவேஜ் இந்த படத்திற்கு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளதாக பேரரசு கூறியுள்ளார். அறிமுக நாயகன் முகுந்தன் மற்றும் பாலிவுட் நாயகி அகன்ஷ்கா புரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அகன்ஷ்கா புரி ஏற்கனவே கார்த்தி நடித்த 'அலெக்ஸ்பாண்டியன்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான பிரசன்னா-சினேகா தம்பதிக்கு இன்று அதிகாலை ஆண்குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

ரஜினி-அஜீத்-விஜய் குறித்து குஷ்பு

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோவில் கட்டிய வரலாறும் தமிழகம் ...

'வாலு' ரிலீஸ் குறித்து டி.ஆர். முக்கிய அறிவிப்பு

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென...

'10 எண்றதுக்குள்ள' படத்தின் அதிகாரபூர்வ டீஸர் ரிலீஸ் தேதி

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி...

'வாலு' வெளியீட்டை தடுக்கவில்லை. உதயநிதி விளக்கம்

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்...