close
Choose your channels

நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்க நொடிகள்' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போலவே அவருடைய மூன்றாவது படமும் ஆக்சன் கலந்த த்ரில் படம் என்று தெரிகிறது. இந்த படத்தின் நாயகனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை 'அசுரவதம்' படத்தை தயாரித்த லீலா லலித்குமார் தயாரிக்கவுள்ளார்.

விக்ரம் தற்போது 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து அவர் 'மகாவீர் கர்ணா' எனற மெகா பட்ஜெட்டில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.