close
Choose your channels

டி ராஜேந்தருக்கு மாரடைப்பு: சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டமா?

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனரும் நடிகர் சிம்புவும் தந்தையுமான டி ராஜேந்தர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் டி ராஜேந்தர் அவர்களுக்கு கடந்த 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியே தெரியாத நிலையில் தற்போது அவர் போரூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது. இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் டி ராஜேந்தர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

67 வயதான டி ராஜேந்தர் அவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது கூட சிம்பு தனது தந்தையின் உடல்நிலை குறைவு குறித்து வெளியே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.