close
Choose your channels

மனைவியின் ஒரு வருட நினைவஞ்சலி: அருண்ராஜா காமராஜின் உருக்கமான கவிதை!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜ் மனைவி கடந்த ஆண்டு மே 17-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நிலையில் அவருடைய ஒரு வருட நினைவஞ்சலி தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டனர் என்பதும் எஸ்பி பாலசுப்பிரமணியன் உள்பட பல திரை உலக பிரபலங்களும் கொரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே 17 ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் மனைவி காலமாகி ஒரு வருடம் ஆகிவிட்டதை அடுத்து தற்போது ஒரு வருட நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவிக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உடனிரு எப்போதும் உடைந்திடா உண்மையாய்
உடைத்திடா மென்மையாய் ..
ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ
நீயே அரணாய் எனை ஆள..
உடனிரு எந்நாளும் பாப்பி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.