இரண்டரை மணி நேர படத்தை இரண்டரை மணி நேரத்திற்கு மட்டும் தான் எடுப்பேன்: இயக்குனர் அஸ்வத்


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, "இரண்டரை மணி நேர படத்தை இரண்டரை மணி நேரத்திற்கு தகுந்தவாறு மட்டும் தான் படப்பிடிப்பு நடத்துவேன். அதற்கும் அதிகமாக படப்பிடிப்பு நடத்த மாட்டேன்" என்று நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிய ’டிராகன்’ திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் பேட்டி அளித்து வருகிறார்கள். நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நான் என்னுடைய படத்தை இரண்டரை மணி நேரம் என்றால், இரண்டரை மணி நேரத்திற்கு மட்டுமான காட்சிகளை மட்டுமே எடுப்பேன். ஏனெனில் அதிகமாக எடுத்தால், எனக்கு எனர்ஜி வேஸ்ட், தயாரிப்பாளருக்கு பணம் வேஸ்ட் ஆகும். இதை மட்டும் நான் முதல் படத்திலிருந்து கடைபிடித்து வருகிறேன்.
என்னுடைய முதல் படத்தை நான் ரூ.3 கோடி பட்ஜெட்டில் 35 நாட்களில் எடுத்து முடித்துவிட்டேன். அதேபோல், ’டிராகன்’ படத்தின் பட்ஜெட் ரூ.37 கோடி என்று நான் கூறிய நிலையில், அந்த பட்ஜெட்டில் நான் எடுத்துவிட்டேன். என்னுடைய படத்தை பொருத்தவரை, பட்ஜெட்டில் செலவு செய்த தொகை திரையில் தெரிந்தாக வேண்டும் என்று நினைப்பேன். ஒருநாளும் அதிகமான காட்சிகளை எடுக்க மாட்டேன். ’டிராகன்’ படத்தையும் சரியான அளவில் தான் நான் எடுத்துள்ளேன். படப்பிடிப்பு தொடங்கும் முன், நான் ஸ்கிரிப்ட் ட்ரிம் செய்து முழுமையாக முடித்துவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்குவேன்" என்று கூறியுள்ளார்.
"இரண்டரை மணி நேர படத்தை 5 மணி நேரம் எடுத்தேன்" என்று பெருமையாக சொல்லும் இயக்குனர்கள் மத்தியில், தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக "எவ்வளவு நேரம் தேவையோ, அந்த அளவுக்கு மட்டுமே படப்பிடிப்பை நடத்துவேன்" என்று அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com