மனித நாகரிகத்தின் உச்சம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து ஒட்டு மொத்த திரையுலகினர்களும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான பாலா அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம், நன்றிகள்! என்று கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் பாலா அவர்கள் திருக்குறள் ஒன்றையும் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த திருக்குறள் இதுதான்:

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி

இந்த திருக்குறளுக்கு ’உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்’ என்பது பொருளாகும்.

More News

ரூ.1000 கொரோனா நிதி கொடுத்த சிறுவனிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ 1000 கொடுத்த இரண்டாம் வகுப்பு சிறுவனுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் பேசி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி

சீமானைப் பற்றிய வெளிவராத உண்மைகள்… வைரலாகும் பிரத்யேக வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார்

சிம்புவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? இயக்குனர் விளக்கம்

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாநாடு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் 'பத்து தல' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது.

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்