இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் விசித்திரமான டைட்டில்!

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்றாலும், பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் ஒரு படத்தை தயாரித்து வருகிறது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு தயாரிப்பாளர் என்றாலும், பாலாவின் ’தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து இந்த படத்திற்கு ‘விசித்திரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ஆர்கே. சுரேஷ், பூர்ணா உள்பட பலர் நடிக்கும் இந்த படம் பத்மகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது என்பதும், இந்த படம் மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

More News

தியேட்டரை விட அதிக கட்டணமா? அதிர்ச்சியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெயர் ரணசிங்கம்' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே.

'கமல்ஹாசன் 232' படம் குறித்த வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் 'கமலஹாசன் 232வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இப்பவே இப்படி, பிக்பாஸ் வீட்டுக்கு போனால் என்ன ஆகுமோ? ஷிவானியை கலாய்த்த நெட்டிசன்கள்

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி என்றும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்

அதிபரை கோமாளி எனக் சொன்னவருக்கு நேர்ந்த கதி… கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்த சம்பவம்!!!

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை கோமாளி என விமர்சித்த அந்நாட்டு தொழிலதிபர் ஒருவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனாவால் இறந்த 87 வயது நபரின் உடலை எலி கடித்து குதறிய கொடூரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது