close
Choose your channels

500 நாளில் ஒருநாள் கூட விஜய் தவறியதில்லை: இயக்குனர் பரதன்

Friday, March 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' மற்றும் பைரவா' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதுபோல் விஜய் நடித்த 'கில்லி' மற்றும் 'மதுர' ஆகிய இரண்டு படங்களுக்கு பரதன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் பரதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'விஜய்யுடன் நான் நான்கு படங்களில் பணிபுரிந்துள்ளேன். கிட்டத்தட்ட அவருடன் நான் இந்த படங்களிலும் சேர்த்து சுமார் 500 நாட்கள் பணிபுரிந்துள்ளேன். இந்த 500 நாளில் அவர் ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து நான் பார்த்ததில்லை. நேரந்தவறாமையை நான் விஜய்யிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்' என்று கூறியுள்ளார். மேலும் விரைவில் அவருடன் மீண்டும் ஒருமுறை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் சிறுத்தை சிவா இயக்கிய 'வீரம்' படத்தின் வசனம் எழுதும்போது ஒரே ஒருமுறை அஜித்தை நேரில் பார்த்ததாகவும், அவர் தன்னைப்பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் அக்கறையுடன் விசாரித்ததாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய பணியை அஜித் பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு புதிய திரைப்படத்திற்காக பரதன் தயாராகியிருப்பதாகவும், அதிரடி ஆக்சன் படமான இந்த படம் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.