close
Choose your channels

ரஜினியை சந்தித்த அந்த மறக்க முடியாத தருணம்: பிரபல இயக்குனரின் மலரும் நினைவுகள்

Saturday, July 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குனருமான சேரன் அவ்வப்போது தனது மலரும் நினைவுகள் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்ததாகவும், ஆனால் ‘தவமாய் தவமிருந்து’ படம் காரணமாக அந்த வாய்ப்பை தான் நழுவவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினியை தான் முதன்முதலில் சந்தித்தது குறித்தும் அப்போது அவர் தன்னை பாராட்டியது குறித்தும் நிகழ்ந்த ஒரு மலரும் நினைவுகளை சேரன் பகிர்ந்துள்ளார். அருணாச்சலம் படத்தின் 202வது நாள் வெற்றிவிழா மேடையில் இயக்குனர் சேரனை 'பொற்காலம்' படம் கொடுத்ததற்காக இயக்குனர் சேரனை மேடையில் அழைத்து தங்கச்சங்கிலி பரிசாக அணிவித்து ரஜினி கவுரவித்து பாராட்டிய நிகழ்வை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே.. C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்..
என்று சேரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 தான் இயக்குனர் சேரனின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.