வருத்தம் தெரிவித்தால் பிரச்சனை முடிந்துவிடும்: 'ஜெய்பீம்' குறித்து சேரன் கருத்து!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒட்டுமொத்த திரையுலகமும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தன என்பதும் சீமான், சந்தானம் போன்றவர்கள் மட்டும் நடுநிலை கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘ஜெய்பீம்’ விவகாரம் குறித்து சேரன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சேரன் கூறியிருப்பதாவது: படம் உருவாக்கத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் உருவாகவில்லை. போலீஸ் அதிகாரியின் பெயர் மாற்றப்பட்டதும், முக்கிய கதாபாத்திரங்களின் உண்மை பெயர் அப்படியே இருப்பதுமே எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாம் நிற்க காரணம்.. அதற்கான பதிலை சொல்லிவிட்டு வருத்தம் தெரிவித்தால் தீர்ந்துவிடும்’ என்று கூறியிருந்தார்.

சேரனின் இந்த கருத்துக்கு ஒருசிலர் ஆதரவும் பலர் கண்டனம் தெரிவித்தும் வரும் நிலையில் அதன்பிறகு அவர் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: என்னோட முந்தைய பதிவுல அதை தெளிவா சொல்லிருக்கேன்.. அது தெரியாம இங்க வந்து நம்ம மக்கள் எனக்கு சூப்பரா வசவு பாடிட்டு போறாங்க... ஹாஹா.. அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கவே செய்கிறேன்... என்னோட முந்தைய பதிவுகளை பாருங்க’ என்று தெரிவித்துள்ளார்.

More News

கடினமான போட்டியாளர்கள் யார் யார்? கமலிடம் தெரிவித்த பார்வையாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கி வரும் நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்களில் கடினமான போட்டியாளர்கள் யார் என்பதை குறித்து கமல்ஹாசன் பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

கமல்ஹாசனை விட அபிஷேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த பிக்பாஸ் டீம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்துவரும் நிலையில் நேற்று இரவு ஒளிபரப்பான எபிசோடில் அபிஷேக் உள்ளே வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிறந்தநாளில் நடிகர் அருண்விஜய் செய்த அசத்தலான காரியம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் அருண்விஜய் நேற்று தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

பணத்தை பறிக்கொடுத்த முதியவருக்கு ரூ.1 லட்சம் தந்த எஸ்.பி… நெகிழ்ச்சி சம்பவம்!

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பணத்தைப் பறிக்கொடுத்து வருந்திய முதியவர் ஒருவருக்கு காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய

இனவெறிக்கு பதிலடி… 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிக் குவித்த இந்தியர்!

சாலையில் செல்லும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பார்த்துவிட்டாலே பலரும் துள்ளிக்குதித்து ஆச்சர்யத்தில் மிதந்து வருகிறோம்.