உங்களுக்கு பொய்யே பேச வராதே! நீங்க எப்படி அரசியலுக்கு? ரஜினிக்கு பிரபல இயக்குனர் கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அரசியல் குறித்து பேசும்போது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு ஏற்படும். இது 1996ஆம் ஆண்டு தேர்தல் முதல் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று ரசிகர்களிடம் உரையாடியபோது, 'கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும் அவ்வாறு அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பேன்' என்று பேசினார்.

ரஜினியின் இந்த அரசியல் வருகை குறித்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாக கூறினாலும் உள்ளுக்குள் அவர் வந்துவிடக்கூடாது என்றே எண்ணுவதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சேரன் ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு குறித்து கூறியபோது, 'வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை. களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?

உங்களுக்கு பொய்யே பேசவராதே. கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது, இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகள் மூடக்கூடாது என சவால்கள் நிறைய. நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். ஏரியா வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

More News

தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தால் இளம்பெண் மரணம். பொதுமக்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு?

போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

24 மணி நேர இடைவெளியில் இரட்டை விருந்து தரும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் 'டோரா' திரைப்படம் வெளியான நிலையில் அவர் தற்போது 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்' மற்றும் 'அறம்' ஆகிய நான்கு தமிழ்ப்படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்...

ரஜினியை மிரட்டவே ப.சிதம்பரம் வீட்டில் சோதனை: கராத்தே தியாகராஜன்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் சென்னை நுங்கம்பாக்கம் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள பல இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது...

என்னால நிற்க முடியவில்லை. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

என்னால நிற்க முடியவில்லை. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது...