close
Choose your channels

சூர்யா அறிக்கையை முதல்வருக்கு டேக் செய்த இயக்குனர்!

Monday, June 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோலிவுட் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே குரல் கொடுத்தனர் என்பது தெரிந்ததே

குறிப்பாக நடிகர் சூர்யா இது குறித்த நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அனைத்து தரப்பினர்களும் இந்த அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க

இந்நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கை குறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சூர்யா கைகோர்த்ததற்கு நன்றி .. அருமையான கடிதம். அஹிம்சை முறையில் எடுத்துச்சொல்வோம். அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விண்ணப்பமாக முன்வைப்போம். அனைவரின் தேவை இதுவென அறியும்போது அரசும் தன்னை மாற்றிக்கொள்ளும் நம்புவோம்.

மேலும் சூர்யாவின் அறிக்கையை தனது டுவிட்டர் மூலம் தமிழக முதல்வருக்கும் அவர் டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.