close
Choose your channels

'ராஜா ரங்குஸ்கி' கதாநாயகி மாற்றம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

Tuesday, January 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இயக்கவுள்ள அடுத்த படம் ''ராஜா ரங்குஸ்கி''. இந்த படத்தின் நாயகனாக மெட்ரோ' புகழ் ஷ்ரிஷ் மற்றும் நாயகியாக 'இறைவி' புகழ் பூஜா தேவாரியா ஓப்பந்தமாகினர்.
ஆனால் தற்போது பூஜா தேவாரியாவுக்கு பதில் 'வில் அம்பு' புகழ் சாந்தினி தமிழரசன் மாற்றப்பட்டுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தமான பூஜா தேவாரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ''ராஜா ரங்குஸ்கி' படத்தை இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிட்டிருந்ததால் பூஜா தேவாரியாவுக்கு பதில் சந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மர்மப்பின்னணி கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முற்றிலும் முடிந்துவிடும் என்று இந்த படத்தின் இயக்குனர் தரணிதரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.