'லெஜண்ட் சரவணன்' படத்தை இயக்குவது தனுஷ் பட இயக்குனரா? அவரே கூறிய விளக்கம்..!

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

பிரபல தொழிலதிபர் 'லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட் 'என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட 'லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் 'லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தனுஷ் நடித்த ’கொடி’ சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் கூறிய கதை லெஜன்ட் சரவணனுக்கு பிடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த துரை செந்தில்குமார் ’நான் 'லெஜண்ட் சரவணன் அவர்களிடம் சொன்ன கதை அவருக்கு பிடித்தது என்பது உண்மைதான், அவரும் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். அப்போது நான் ஒரு ஐடியாவை சொன்னேன், நான் சொன்ன ஐடியா அவருக்கு பிடித்திருந்தது, ஆனால் இன்னும் நிறைய வேலைகள் இருக்கு, பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து 'லெஜண்ட் சரவணன் படத்தை துரை செந்தில் குமார் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

சைதை துரைசாமி மகன் நிச்சயம் திரும்பி வருவார்.. தமிழ் திரைப்பட ஹீரோ நம்பிக்கை..!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் காணாமல் போன நிலையில் அவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்

'லால் சலாம்' படத்தின் சிங்கிள் பாடல்.. தேனிசை தென்றலின் உருக வைக்கும் குரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை விவாகரத்தா? 12 ஆண்டு மணவாழ்க்கை முடிகிறது..!

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது

ரூ.7 கோடி நன்கொடை கொடுத்த அதே பள்ளிக்கு மீண்டும் ரூ.3 கோடி.. ஆயி பூரணம்மாளுக்கு குவியும் வாழ்த்து..!

மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம்மாள் என்பவர் சமீபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு 3 கோடி ரூபாய்

ரஜினியுடன் போனில் பேசிய விஜய்.. காக்கா - கழுகு கதையை மறப்பார்களா ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தளபதி விஜய் போனில் பேசி நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இரு தரப்பு ரசிகர்களும் காக்கா கழுகு கதையை மறந்து ஒற்றுமையாக செயல்படுவார்களா