close
Choose your channels

அரசியல் கட்சி தொடங்கும் தமிழ் இயக்குனர்

Monday, November 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகினர் பலருக்கு அரசியல் ஆசை வந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கவுதமன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'கனவே கலையாதே' மற்றும் 'மகிழ்ச்சி' என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ள கவுதமன், 'சந்தனக்காடு' மற்றும் 'ஆட்டோ சங்கர்' போன்ற தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழர், ஸ்டெர்லைட் போராட்டம், மீத்தேன் போராட்டம், விவசாயிகள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த வந்த இவர் சமீபத்தில் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர். போராட்டங்களுக்காக சிலமுறை சிறையும் சென்றுள்ள கவுதமன் தற்போது அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார்.

தமிழ்ப்பற்று, தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வரும் கவுதமன் இன்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமான அறிவிக்கவுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.