பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினாரா இன்னொரு இயக்குனர்.. ரஜினி, சூர்யா படத்தை இயக்கியவர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம், நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் மீதும், பாகிஸ்தான் மீதும் இந்திய மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், ஒரு சிலர் போர் வேண்டாம் என்று கூறி வருவது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறுவது போல் அமைவதாக தெரிகிறது. ஏற்கனவே நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து நிலையில், தற்போது இயக்குனர் ரஜினி நடித்த ’வேட்டையன்’, சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
’போர் என்பது அடிப்படை மனித தன்மையற்றது’ என்றும், ’இப்போது கூட கண்முன்னே அது நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் போர் பற்றி குறிப்பிடும் போது, ’பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், ஆடு, மாடுகளை ஒதுக்கிவிட்டு போர்களை அறிவிக்க வேண்டும். ஆனால் இன்று சுற்றுலா தளம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதைவிட மிக கொடூரமானது என்னவெனில், பாகிஸ்தான் குழந்தை மருத்துவத்திற்காக இந்தியா வந்த நிலையில், அந்த குழந்தையை 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது இன்னொரு விளைவை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
இதனை எடுத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் பேசியதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பகுதியில் கூறுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com