close
Choose your channels

தலைமறைவாக வாழும் நடிகையின் கணவர்.. உயிருக்கு ஆபத்தா?

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையின் கணவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் அவரது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்று இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்ற படத்தில் பிரபல நடிகையாக காயத்ரி ஐயர் மற்றும் அவரது கணவராக விவேக் பிரசன்னா நடித்துள்ளார். விவேக் பிரசன்னா சூழ்நிலை காரணமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் அவரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.

இதனையடுத்து விவேக் பிரசன்னாவை நிஷாத் என்பவர் காப்பாற்றுகிறார், அதனை தெரிந்து கொண்ட அந்த கும்பல் மீண்டும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதில் இருந்து விவேக் தப்பித்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? எதற்காக அவர் தலைமுறை வாழ்க்கை வாழ்கிறார்? நடிகை காயத்ரிக்கு என்ன ஆச்சு? என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலானவை காட்டுப்பகுதியில் நடந்துள்ளது என்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களீன் மனதை கவரும் என்றும் இயக்குனர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment