close
Choose your channels

சிம்புவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸா? இயக்குனர் விளக்கம்

Monday, May 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த ‘மஹா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த படத்தின் இயக்குனர் ஜலீல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்த ‘மஹா’ படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முதலில் ஒப்பந்தமானார். ஆனால் அதன் பிறகு அவருடைய கேரக்டர் விரிவக்கபட்டதாகவும் இந்த படத்தில் சிம்பு தற்போது ஹீரோ போல் நடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் சென்சாருக்கு சென்றுள்ளதாகவும், இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ஜலீல், ‘மஹா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று கூறப்படும் தகவல் பொய்யானது. சிம்பு ரசிகர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொண்டுள்ளேன். நான்கு ஆண்டுகளாக ‘மஹா’ படத்திற்காக பொறுமை காத்த சிம்புவின் ரசிகர்கள் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

சிம்பு ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் லட்சுமண் ஒளிப்பதிவும் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு பணிகளையும் செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.