பிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினசரி தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி கொண்டு இருக்கின்றனர் என்பதும் அவர்களில் சிலர் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல இயக்குனர் ஒருவரின் தாயார் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘உல்லாசம்’ ’விசில்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜேடி-ஜெர்ரி. இந்த இரட்டையர்கள் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரட்டை இயக்குனர்களில் ஒருவராக ஜெர்ரி அவர்களின் தாயார் சோலையம்மாள் அவர்கள் கொரோனா தோற்று பரவியதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 78. ஜெர்ரி தாயார் மறைவுக்கு தற்போது திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் இன்று இயக்குனர் ஜெர்ரியின் தாயாரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

நிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்ததால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சீரியல் நடிகை மைனாவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில் இரண்டாம் பாகத்தில் கவின் மற்றும் ரக்சிதா நடித்திருந்த நிலையில் ரக்சிதாவுக்கு தோழியாக நடித்தவர் மைனா என்ற நந்தினி என்பது தெரிந்ததே 

இன்று முதல் சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கோ அல்லது மாவட்டங்களுக்குள் செல்வதற்கோ இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது

இரண்டு பாகங்களாக வெளிவரும் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா'திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலக அளவுக்கு செல்லும் 'ஒத்த செருப்பு' திரைப்படம்: பார்த்திபன் அறிவிப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருப்பார் என்பதும் அது மட்டுமன்றி அவரே இந்த படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்