close
Choose your channels

இதற்கு மேல் 'த்ரிஷ்யம் 'படத்தை நீட்டிக்கும் எண்ணம் இல்லை: ஜித்து ஜோசப்

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘த்ரிஷ்யம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படம் தமிழில் 'பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாது தெரிந்ததே.

மேலும் ‘த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் தமிழிலும் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து கருத்து கூறிய இயக்குநர் ஜீத்து ஜோசப், ‘த்ரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்திற்குரிய கிளைமாக்ஸ் ஐடியா தன்னிடம் இருப்பதாகவும், அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் மூன்றாம் பாகத்துடன் இந்த படத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு மேல் இந்த படத்தை நீட்டிக்கும் திட்டம் நிச்சயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.