காசு கொடுத்து பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம்.. கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


"ஒரு காலத்தில், காசு கொடுத்தால்தான் ஒரு படத்திற்கு நேர்மறையான விமர்சனம் செய்வார்கள். ஆனால், இப்போது எதிர்மறை விமர்சனம் செய்ய காசு கொடுப்பதாக நான் முதல்முறையாக கேள்விப்படுகிறேன். எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது," என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான 'ரெட்ரோ' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் வசூல் அளவில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், விமர்சனங்கள் ஓரளவுக்கு நன்றாகத்தான் ஊடகங்களில் வந்தன.
இந்த நிலையில் தான், 'ரெட்ரோ' படம் குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், "இந்த படத்திற்கு எதிராக காசு கொடுத்து வெறுப்புப் பிரச்சாரம் பண்ணப்படுவதை நான் முதல் முதலில் பார்த்தேன்," என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"நான் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தபோது, மக்கள் 'ரெட்ரோ' படத்தைப் பெரிதும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், காசு கொடுத்து விமர்சனங்களை எழுதுவது மட்டுமல்லாமல், காசு கொடுத்து எதிர்மறை எண்ணங்களையும் பரப்பும் திட்டமிட்ட பிரச்சாரங்களை நடத்துகிறார்கள் என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
வெறுப்புப் பிரச்சாரம் காரணமாகத்தான் 'ரெட்ரோ' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை" என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com