close
Choose your channels

'கடைசி விவசாயி' படத்தின் கதை இதுதானா?

Saturday, October 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்ட நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் 'கடைசி விவசாயி' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு ஆர்ட் படத்தை கமர்ஷியலோடு எடுக்கும் வித்தையை கற்றுள்ள மணிகண்டன், 'கடைசி விவசாயி' படத்தின் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையோ அல்லது காவிரி பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது குறித்தோ கதை சொல்ல போவதில்லையாம்.
பயிர் செய்யும் விவசாயி தான் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை மயில், மான் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற எப்படி போறாடுகிறார் என்பதுதான் கதையாம். பறவைகள் வாழும் மரங்களை வெட்டி சேதப்படுத்தினால் அவை பயிர்களை சேதப்படுத்திவிடும், எனவே பறவைகளை நிம்மதியாக வாழவிடுங்கள்' என்ற கருத்தை தான் தன்னுடைய பாணியில் சொல்ல போகிறாராம் மணிகண்டன்.
வித்தியாசமான கோணத்தில் யோசித்துள்ள மணிகண்டனின் கான்செப்ட் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.