close
Choose your channels

முழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்

Saturday, September 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். குறிப்பாக அவரது மறைவால் இசைத்துறையில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் எஸ்பிபி குறித்து அவருடன் பழகியவர்கள் மட்டுமின்றி பழகாதவர்களும் கூட தங்களது இரங்கலையும் அவருடைய பெருமைகளையும் சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்து பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:

நம் நாட்டிற்கும் நமது சினிமா சகோதரத்துவத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் இல்லாமல் நாம் வீரக் குரல் இல்லாமல் இருக்கிறோம். அவரது ரசிகர்கள் அனைவரையும் போலவே நான் உடைந்துவிட்டேன். அன்பான எஸ்.பி.பி ஐயா, நான் முழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.