ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிப்பது உண்மையா? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ரஜினி-ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் ரஞ்சித், இது முற்றிலும் பொய்யான வதந்தி என்று பதிலளித்துள்ளார். இதன்மூலம் இந்த படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
மேலும் ரஜினி-ரஞ்சித் படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரம் 14ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

More News

அஜித்-விஜய்: டான்ஸில் யார் பெட்டர்? காஜல் அகர்வால் அளித்த பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கும்.

சென்னையில் பிரபல கார் ரேஸ் வீரர் மனைவியுடன் மரணம்

தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் சென்னை மெரீனா அருகே நடந்த கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்

உலக அளவில் 11வது இடத்தை பிடித்தது 'பாகுபலி 2'

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என்பதை பார்த்தோம்

ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சூர்யாவுக்கு விஜய் நன்றி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது 'சி 3' படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது, மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், தனது கையினாலே வரைந்த விஜய்யின் ஓவியத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை விஜய்யிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு தேதி

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது அந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.