நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம்: நீட் மரணம் குறித்து பா ரஞ்சித்

கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் நீட் தேர்வை எழுதிவிட்டு வந்த அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி என்பவரும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு முன்பும், நீட் தேர்வுக்கு பின்பும் என இரண்டு மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தருவோம் என்று கூறிய திமுக அரசு அதுகுறித்த ஆயத்த பணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட்தேர்வு மரணம் குறித்து பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது:

நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்கம் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

More News

இரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்? விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடின்ஹி எனும் கிராமத்தில் பிறக்கிற பெரும்பாலான குழந்தைகள்

கோழி ரத்தத்தை ஊசி மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்… பகீர் சம்பவம்!

சீனாவில் உள்ள பல நகரங்களில் “சிக்கன் பேரண்டிங்(Chicken Parenting)“ எனும் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை வளர்ப்பு முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

ஒற்றை புகைப்படத்தால் சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா சரண்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

தோனி எதற்கு? கேள்வி கேட்டவர்களுக்கு நெற்றியடி பதில் கொடுத்த கங்குலி!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டதைப்

சூரியகுமார் யாதவிற்கு பிறந்தநாள்… படு வித்தியாசமான பரிசு கொடுத்த சக வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேனாக தொடர்ந்து பல போட்டிகளில் கலக்கி வருபவர் சூரியகுமார்