close
Choose your channels

சூர்யா குறித்து கிளம்பிய திடுக்கிடும் வதந்தி: பிரபல இயக்குனர் விளக்கம்!

Friday, January 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது

இந்த படத்தில் சூர்யா ஐந்து கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு கேரக்டர் தமிழக முதலமைச்சர் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் ’வதந்திகளை நம்பவேண்டாம்’ என்றும் ’இன்று பகல் 12 மணிக்கு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் முதலமைச்சராக நடிக்கிறாரா? இன்று 12 மணிக்கு வெளியாக இருக்கும் அறிவிப்பு என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.