close
Choose your channels

ரஜினியை அடுத்து எம்ஜிஆர் டைட்டிலை தேர்வு செய்த பொன்ராம்!

Wednesday, September 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்க்ரீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ தயாரிப்பில்‌ பொன்‌.ராம்‌ - சசிகுமார்‌ கூட்டணியில் இன்று தொடங்கியுள்ள திரைப்படத்திற்கு 'எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கிய இரண்டாவது படத்திற்கு 'ரஜினி முருகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது நான்காவது படத்திற்கு 'எம்ஜிஆர் மகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிராமம்‌ சார்ந்து கமர்ஷியல்‌ படங்கள்‌ கொடுத்து வெற்றிப்‌ பெற்றவர்‌ இயக்குநர்‌ பொன்‌.ராம்‌. அவரோடு இப்போது சசிகுமார்‌ கைகோர்த்துள்ளார்‌. இந்தக்‌ கூட்டணியில்‌ உருவாகும்‌ படத்தின்‌ படப்பிடிப்பு தேனியில்‌ இன்று தொடங்கப்பட்டுள்ளது.

்‌ எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌ 'என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்‌ படத்தில்‌ சசிகுமார்‌, சத்யராஜ்‌, சரண்யா பொன்வண்ணன்‌, சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர்‌ நடிக்கின்றனர்‌. இந்தப்‌ படத்தின்‌ மூலம்‌ தமிழ்‌ தரையுலஇகில்‌ நாயகியாக களமிறங்கிறார்‌ மிருணாளினி ரவி.

கதை, திரைக்கதை, வசனம்‌ மற்றும்‌ இயக்கம்‌ ஆகிய பணிகளைக்‌ இயக்குநர்‌ பொன்‌.ராம் கவனிக்கின்றார்‌. இந்தப்‌ படத்துக்கு வினோத்‌ ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன்‌ இசையமைக்கிறார்‌. விவேக்‌ ஹர்ஷன்‌ படத்தொகுப்பு பணிகளையும்‌, துரைராஜ்‌ கலை இயக்குநராகவும்‌ பணிபுரியவுள்ளனர்‌.

சரவணன்‌ தயாரிப்பு நிர்வாகியாகவும்‌, சித்தார்த்‌, செந்தில்குமார்‌ ஆகியோர்‌ நிர்வாகத்‌ தயாரிப்பாளர்களாக பணிபரியும்‌ இந்தப்‌ படத்தை ஸ்கிரீன்‌ சீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனம்‌ பெரும்‌ பொருட்செலவில்‌ தயாரிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.