close
Choose your channels

ரிலீசுக்கு தயாராகும் பிரபல இயக்குனரின் இரண்டு படங்கள்

Sunday, November 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ஒரு படத்தையும் அதர்வா நடித்து வரும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகவிருப்பதாகவும், இந்த படத்தை வரும் பிப்ரவரியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மசாலா பிக்ஸ் அசோசியேஷன், எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் அவருக்கு 400வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதும், ‘நின்னுகோரி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.