ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்பதும், இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் கே.என்.ரவி உள்பட பல அரசியல் பிரபலங்களும் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் வாழ்த்து தெரிவிக்காததையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் ரஜினிகாந்துக்கு துணை குடியரசு தலைவர் தாதாசாகேப் பால்கே விருது கொடுத்தது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து, ‘தாதாசாகேப் பால்கேவுக்கு ரஜினிகாந்த் கொரியர் மூலம் விருதை கொடுத்தார் என்று பதிவு செய்துள்ளார்

இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ரஜினியை கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டு துணை குடியரசுத் தலைவரை அவமரியாதையாக பதிவு செய்திருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகிறது. துணை குடியரசு தலைவர் பதவி என்பது மதிப்பும் மரியாதையும் மிக்க ஒரு பதவியாக இருக்கும் நிலையில் அவரை கொரியர் மேன் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது



ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்துள்ள ராம்கோபால்வர்மா, ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து துணை குடியரசுத் தலைவரை அவமதிப்பு பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஆபாச சைட்டில் கணக்கு பாடம் நடத்திய ஆசிரியர்… மாணவர் ரியாக்ஷன்ஸ் என்ன தெரியுமா?

ஆபாச வீடியோ வெளியிடும் வெப் சைட் ஒன்றில் தைவான் நாட்டைச் சேர்ந்த

உன் மேல பயங்கரமா கோபமா இருக்கேன்: ஸ்ருதியை எச்சரிக்கும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்து உள்ளது என்பதும் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்

ஐபிஎல் தொடரில் புதிய 2 அணிகள்… Owners யார் தெரியுமா?

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இடம்பெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்து

நாமினேஷனில் எத்தனை பேர்? யார் யாரையெல்லாம் நாமினேட் செய்தார்கள்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் மொத்தம் 9 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். அவர்களின்

ஸ்ருதி ஆட்டம் ஆரம்பம்: தாமரை செல்வியை கதற வைத்ததால் பரபரப்பு!

பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த பஞ்ச தந்திரம் என்ற டாஸ்க்கில் 5 காயின்கள் வழங்கப்பட்டது என்பதும் அந்த ஐந்து காயின்கள் தாமரை, இசைவாணி, வருண், பாவனி ரெட்டி மற்றும் அபினய் ஆகியோர் கையில்