close
Choose your channels

ரூபா ஐபிஎஸ்: திரைப்படம் ஆகிறதா சசிகலா சலுகை விவகாரம்?

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி ஜெயில் உயரதிகாரிகளுக்கு கைமாறிய சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா அவர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் என்பவர் 'ரூபா ஐ.பி.எஸ்' என்ற பெயரில் திரைப்படம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா ஐபிஎஸ், "சிறையில் எனது நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட திரைப்பட இயக்குனர் ரமேஷ், என் பெயரில் 'ரூபா ஐ.பி.எஸ்' என சினிமா தயாரிப்பதாக கேள்விப்பட்டேன். சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என் பெயரில் சினிமா தயாரிப்பதற்கு அனுமதிப்பது குறித்து யோசித்து முடிவு செய்வேன்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.