போலீஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,April 28 2019]

பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற, மக்களவை தேர்தல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் இயக்கிய 'லட்சுமியின் என்.டி.ஆர்' என்ற படத்தை வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்

இந்த படத்திற்கான பிரஸ்மீட் நேற்று விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா செல்ல முயன்றபோது, விஜயவாடாவிற்குள் நுழையும் முன்பே ஆந்திர போலீசார் அவரை கஸ்டடியில் எடுத்து மீண்டும் ஐதராபாத் திரும்ப அவரை வற்புறுத்தியுள்ளனர். இதனால் நேற்று நடைபெறவேண்டிய பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டது

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'ஆந்திராவில் ஜனநாயகம் இல்லை. உண்மையை சொல்ல முயற்சித்த என்னை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர். என்னுடைய சமூக வலைத்தள பக்கங்களும் தடுக்கப்பட்டுள்ளதால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
 

More News

4 ஆண்டுகளாக கல்லூரி மாணவியை சீரழித்த திருமணமான காமுகன் கைது!

ஈரோடு அருகே கல்லூரி மாணவி ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருமணமான காமுகன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்!

முன்னாள் திமுக எம்பியும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56

அவெஞ்சர்ஸ் படம் பார்த்ததால் உயிருக்கு போராடிய இளம்பெண்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.

ரூ.90 லட்சம் மோசடி: போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை

தன்னிடம் மேனேஜராக இருந்தவர் தனக்கு தெரியாமல் ரூ.90 லட்சம் மோசடி செய்ததாக நடிகை குட்டிபத்மினி இன்று போலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.