வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்? இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்

  • IndiaGlitz, [Sunday,December 10 2017]

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய் அவர்களுடைய நிலைமை என்னவென்றே தெரியாததால், அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் கடலில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் மீட்புக்குழுவினர் கடலில் காணாமல் போன மீனவர்களை தேடி, அவர்களை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் ஆளும் அரசின் முழு கவனம் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே உள்ளது. முதல்வர் நேரடியாக கன்னியாகுமரி சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை காற்றில் பறந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் காட்டமாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு??கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா!! #RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்??' என்று கூறியுள்ளார்.

More News

முதன்முதலாக இணையும் சூர்யா-எஸ்.ஜே.சூர்யா

நடிகர்கள் சூர்யா, எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் இதுவரை இணைந்து பணியாற்றியதில்லை என்ற நிலையில் முதல்முதலாக தற்போது இருவரும் இணைந்துள்ளனர்.

கரடு முரடான பாதையில் 15 ஆண்டுகால திரைப்பயணம்: பிரசன்னா அறிக்கை

நடிகர் பிரசன்னா நடிப்பில் உருவான 'திருட்டுப்பயலே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, திருப்தியான வசூலை பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவா, தமன்னா நடித்த' தேவி' கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது, 'யங் மங் சங்', 'மெர்க்குரி', 'குலேபகாவலி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

விமானத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை

இந்தியாவின் மிக அதிக வசூலை செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற அமீர்கானின் 'தங்கல்' படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்த நடிகை ஜைரா வாசிம்.

யூ-டர்ன் தமிழ் ரீமேக்கில் திடீர் மாற்றம்

கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய யூடர்ன் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'சைத்தான்' 'சத்யா' படங்களை இயக்கிய பிரதீப் இயக்கவுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தது.