close
Choose your channels

வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்? இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்

Sunday, December 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய் அவர்களுடைய நிலைமை என்னவென்றே தெரியாததால், அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் கடலில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் மீட்புக்குழுவினர் கடலில் காணாமல் போன மீனவர்களை தேடி, அவர்களை கண்டுபிடித்து வருகின்றனர். இருப்பினும் ஆளும் அரசின் முழு கவனம் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே உள்ளது. முதல்வர் நேரடியாக கன்னியாகுமரி சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை காற்றில் பறந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் காட்டமாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு??கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா!! #RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்??' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.