அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி? 'மாஸ்டர்' பட பிரபலம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய போது ’கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்றும், இதேபோல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

மேலும் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவரும் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரத்னகுமாரின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 

More News

கொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக திரையுலகை சேர்ந்த பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அரசுக்கு உதவி

நான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது

சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் 'கொரோனாவை என் கண் முன் காட்டு, முதலமைச்சரை என் முன்னால் வந்து நின்று நிற்கச்சொல்' என வீராவேசம்

கொரோனாவுக்கு பழந்தமிழ் வைத்தியம்!!! வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா???

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் முதற்கொண்டு அனைத்து சமூக வலைத் தளங்களிலும் கொரோனாவுக்கு மருந்து என்ற பெயரில், சில புத்தகத் தாள்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி விட்டது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இருந்தாலும்

உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா இருக்கிறதா??? தெரிந்துகொள்ள  இந்த செயலியை பயன்படுத்துங்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது