நடிகர் சாயாஜி ஷிண்டே மீது திடுக்கிடும் புகார்.. காவல்துறையினர் விசாரணை

  • IndiaGlitz, [Wednesday,December 07 2022]

பிரபல குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்ததை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

’பாரதி’ என்ற திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. அதன்பின் இவர் ’பூவெல்லாம் உன் வாசம்’ ’பாபா’ ’தூள்’ ’படிக்காதவன்’ ’வேட்டைக்காரன்’ ’வேலாயுதம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் சச்சின் என்பவர் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சச்சின் தனது தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடிக்க சாயாஜியை ஒப்பந்தம் செய்தார். ரூபாய் 5 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியில் திடீரென திரைக்கதையை மாற்றுமாறு சாயாஜி ஷிண்டே கூறியதாகவும் அதனால் சச்சின் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அவரது கோரிக்கையை நிறைவேற்றாததால் படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறியதாகவும் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் சச்சின் பலமுறை சாயாஜி ஷிண்டேவை தொடர்பு கொண்ட போதும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனை அடுத்து அவர் காவல் நிலையத்திலும், திரைப்பட சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். சாயாஜிக்கு தான் 5 லட்சம் சம்பளமாக கொடுத்ததாகவும் அதுமட்டுமின்றி அவரால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு 17 இலட்சம் கூடுதலாக அவர் செலுத்த வேண்டும் என்றும் மொத்தம் 22 லட்சம் அவர் தனக்கு தர வேண்டும் என்றும் காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

காலையில் இருந்து என்னை சுத்தி என்னென்னமோ நடந்துகிட்டு இருக்கு: பரத்தின் 'லவ்' டீசர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பரத். தற்போது 50வது படமான 'லவ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'சர்தார்' வெற்றியை கொண்டாடிய கார்த்தி.. கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 

சொந்த ஊரில் பிரமாண்டமான வீடு கட்டிய விஜய் டிவி ராமர்..

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராமர் தனது சொந்த ஊரில் புது வீடு கட்டி இருக்கும் நிலையில் இந்த வீட்டின் கிரக பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மனைவியுடன் சிபிராஜ் .. வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

நடிகர் சிபிராஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஷாருக்கானுடன் இணையும் 2 தென்னிந்திய பிரபலங்கள்.. தயாரிப்பது யார் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்தப் பக்கத்தில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள்