இயக்குனர் சசியின் அடுத்த படத்தின் டைட்டில் - மோஷன் போஸ்டர்!

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

தமிழ் திரை உலகின் தரமான இயக்குனர்களில் ஒருவரான சசி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

‘சொல்லாமலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’ரோஜா கூட்டம்’ ’பூ’ ‘பிச்சைக்காரன்’ ’சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சசி.

இவர் தற்போது ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இட்னானி இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு ’நூறு கோடி வானவில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், விஜே பார்வதி உள்பட பலர் நடிக்கும் இந்த படம் பிரசன்னா ஒளிப்பதிவில் சித்து குமார் இசையில் உருவாகிவருகிறது.

More News

கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமாருக்கு குடிசையில் நினைவு இல்லம்!

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமார் சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவு இல்லம் ஒரு குடிசையில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தள்ளிப்போகிறதா பிக்பாஸ் ஓடிடி: புதிய தேதி என்ன?

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வரும் ஞாயிறு அன்று நிறைவு பெற உள்ள நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியான நிலையில்

98 நாட்கள் இருந்த தாமரையின் சம்பளம் இவ்வளவுதானா? 

பிக்பாஸ் வீட்டில் தாமரை 98 நாட்கள் இருந்த நிலையில், அவர் இருந்த நாட்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதுக்கு பேரு ஜல்லிக்கட்டா? பேசாம நிறுத்திடுங்க: பிரபல நடிகர் பேட்டி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு கட்டுப்பாடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட

எனது நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை: மன்னிப்பு கேட்ட சித்தார்த்

தான் கூறிய நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றும் அதனால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலுக்கு எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.