close
Choose your channels

அன்புச்செழியன் உத்தமர்: அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: பிரபல இயக்குனர்

Thursday, November 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டல் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இறந்ததாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகிய அவரை தேடும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அன்புச்செழியன் உத்தமர் என்றும் அவரை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் பிரபல இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே...

இயக்குனர் சீனுராமசாமியின் இந்த கருத்து கோலிவுட் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டிக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமே குரல் கொடுத்து வரும் நிலையில், சீனுராமசாமியின் இந்த கருத்துக்கு சமூகவலைத்தள பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.